பல்லவி
அம்ம த4ர்ம ஸம்வர்த4னியாது3கோவம்ம மா(யம்ம)
அனுபல்லவி
இம்மஹினி நீ ஸரியெவரம்ம ஸி1வுனி கொம்ம மா(யம்ம)
சரணம்
சரணம் 1
1தா4த்ரி த4ர நாயக ப்ரிய புத்ரி மத3ன கோடி மஞ்ஜுள
கா3த்ரி அருண 2நீரஜ த3ள நேத்ரி நிருபம ஸு1ப4
கா3த்ரி 3பீட2 நிலயே வர ஹஸ்த த்4ரு2த வலயே பரம
பவித்ரி ப4க்த பாலன து4ரந்த4ரி 4வீர ஸ1க்தி நே நம்மினா(னம்ம)
பதம் பிரித்தல் - பொருள்
பல்லவி
அம்ம/ த4ர்ம/ ஸம்வர்த4னி/-ஆது3கோ/-அம்ம/ மா/-(அம்ம)
தாயே/ அறம்/ வளர்த்த நாயகியே/ ஆதரிப்பாய்/ அம்மா/ எமது/
அனுபல்லவி
இம்-மஹினி/ நீ/ ஸரி/-எவரு/-அம்ம/ ஸி1வுனி/ கொம்ம/ மா/-(அம்ம)
இப்புவியில்/ உனக்கு/ ஈடு/ எவர்/ அம்மா/ சிவனின்/ இல்லாளே/ எமது/ தாயே..
சரணம்
சரணம் 1
தா4த்ரி/ த4ர/ நாயக/ ப்ரிய/ புத்ரி/ மத3ன/ கோடி/ மஞ்ஜுள/
தாயே/ மலை/ அரசனின்/ செல்ல/ மகளே/ மதனர்/ கோடி/ எழில்/
கா3த்ரி/ அருண/ நீரஜ/ த3ள/ நேத்ரி/ நிருபம/ ஸு1ப4/
உடலினளே/ இளஞ்சிவப்பு/ தாமரை/ இதழ்/ கண்ணினளே/ உவமையற்ற/ மங்கள/
கா3த்ரி/ பீட2/ நிலயே/ வர/ ஹஸ்த/ த்4ரு2த/ வலயே/ பரம/
உருவினளே/ (புனித) பீடங்களிலுறைபவளே/ புனித/ கரங்களில்/ அணிபவளே/ வளையல்/ முற்றிலும்/
பவித்ரி/ ப4க்த/ பாலன/ து4ரந்த4ரி/ வீர/ ஸ1க்தி/ நே/ நம்மினானு/-(அம்ம)
புனிதமானவளே/ தொண்டரை/ காக்கும்/ சுமையேற்றவளே/ வீர/ சக்தியே/ நான்/ (உன்னை) நம்பியுள்ளேன்/
குறிப்புக்கள் - (Notes)
வேறுபாடுகள் - (Pathanthara)
2 - நீரஜ த3ள - வாரஜ த3ள.
Top
மேற்கோள்கள்
1 - தா4த்ரி - "பெயரும், உருவமுமான இவ்வுலகத்தின் அடிப்படையும், அனைத்து விதமான அனுபவங்களுக்கு ஆதாரமும், வெளியுலக அனுவங்கள் எனும் படத்திற்கு வெள்ளித்திரையுமான பரம்பொருள்." (தமிழாக்கம்) விஷ்ணு ஸஹஸ்ர நாமம் (43) 'தா4தா'
3 - பீட2 நிலயே - லலிதா ஸஹஸ்ர நாமத்தில் (833) அம்மையின் பெயர் - 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' - 50 பீடங்களின் வடிவானவள் - இதையே, தீக்ஷிதர், தமது 'பஞ்சா-ஸ1த்-பீட2 ரூபிணி' என்ற கீர்த்தனையிலும் குறிப்பிடுகின்றார்.
இந்த 50 ஸ1க்தி பீட2ங்கள் (1); ஸ1க்தி பீட2ங்கள் (2) சிவனின் மனைவி ஸதியின் உடல் பாகங்களென்றும், மொழியின் 50 ஆதார ஒலி வடிவங்களென்றும் கூறப்படும்.
Top
4 - வீர ஸ1க்தி - 'கௌளம்' மற்றும் 'சாக்தம்' எனப்படும் 'சக்தி வழிபாட்டு முறை'யில், 'வீர சக்தி' என்பதற்குத் தனிப்பட்ட பொருளுண்டு. தியாகராஜர், 'வீர' என்ற சொல்லினைப் பொதுவாக பயன்படுத்தியுள்ளாரா அல்லது சாக்தத்தின் சிறப்புச் சொல்லாகவா என்பது விளங்கவில்லை. சக்தியும் சாக்தமும்
4 - ஸ1க்தி - எட்டு சக்திகள் - இந்திராணி, வைஷ்ணவி, சாந்தா, பிரம்மாணி, கௌமாரி, நாரஸிம்ஹி, வாராஹி, மாஹேஸ்வரி.
6 - கத3ம்ப3 க3ஹன ஸஞ்சாரிணி - லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மையின் பெயர், 'கத3ம்ப3 வன வாஸினி' (60) - மதுரையம்பதி, கதம்ப வனம் எனப்படும். கதம்ப மரம் அங்கு தல விருக்கமாகும்.
Top
8 - ஸ1ம்ப3ராரி வைரி - சிவன் - 'ஸம்பரன்' என்ற அரக்கனை, காமனின் மறு பிறப்பென கருதப்படும், கண்ணன் - ருக்மிணியின் மகனான, 'பிரத்யும்நன்' கொன்றான். எனவே காமன், ஸம்பரனின் எதிரியாகும். சிவன், காமனின் எதிரியாகும். பிரத்யும்நனின் கதையினை பாகவத புராணத்தில் (10-வது புத்தகம், 55-வது அத்தியாயம்) நோக்கவும்.
9 - கௌமாரி - குமரனின் சக்திக்கு கௌமாரி என்று பெயராகும். மேற்கூறிய எட்டு சக்திகளில் ஒன்று.
10 - த்ரயம்ப3கே - முக்கண்ணினள் - த்ரி லோசனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (477). சிவனுக்கும், விஷ்ணு அவதாரமான, நரசிங்கத்திற்கும் முக்கண்கள் உள்ளதனால் 'த்ரயம்பக' என்று அழைக்கப்படுவர். சிவனின் த்ரயம்பகேஸ்வர அம்பதி 'கோதாவரி' நதி பிறக்கும் 'நாஸிக்' என்ற இடத்தில் உள்ளது.
11 - காத்யாயனி - லலிதா ஸஹஸ்ர நாமம் (556) - "அனைத்து தேவதைகளின் ஒருமித்த சுடரொளி" எனப்பொருளாகும். (ஸ்வாமி தபஸ்யானந்தாவின் ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்).
தேவி புராணத்தில் காத்யாயனி என்ற சொல்லின் விளக்கம் நோக்கவும்.
Top
விளக்கம்
5 - கம்பு3 கண்டி2 - சங்குக் கழுத்தினள் - மூன்று வரிகளுள்ள கழுத்து
7 - தடித் - எல்லா புத்தகங்களிலும் இங்ஙனமே கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு 'மின்னல்' என்ற பொருள் கொள்ளப்பட்டுள்ளது. ஸம்ஸ்கிருத அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடி3த்' என்பது சொல்லாகும். ஆனால், தெலுங்கு அகராதியின்படி, மின்னலுக்கு, 'தடித்' என்பதே ஸம்ஸ்கிருதச் சொல் என்று கொடுக்கப்பட்டுள்ளது. லலிதா ஸஹஸ்ர நாமத்தில், அம்மைக்கு 'தடில்லதா ஸமருசி:' - 'மின்னற் கொடி போன்ற காந்தியுடையவள்' என்று பெயராகும்.
அறம் வளர்த்த நாயகி - (த4ர்மஸம்வர்த4னி) - திருவையாற்றில் அம்மையின் பெயர்.
ஸஹ்ய கன்னி - காவிரி (மேற்குத் தொடர்ச்சி மலை 'ஸஹ்யாத்ரி' எனப்படும்)
Top